பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 693 பேர் கைது!

3 hours ago

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் 30,954 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிடியாணை உத்தரவினை தவி;ர்த்துவந்த 263 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 118 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 09 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன், ஏனையபோக்குவரத்து குற்றங்களுக்காக 3,948 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்