தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம்!

4 hours ago

தலைமறைவாகியுள்ள 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Related