புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் 3 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.











