அரசாங்க மானியங்கள் முடிவுக்கு வரவேண்டும்! நிலைப்பாட்டை அறிவித்த ஹந்துன்நெத்தி

9 hours ago

தனது அரசாங்கம் எப்போதும் நிவாரணங்களை விநியோகிப்பதை மையமாக கொண்டு ஆட்சிக்கு வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை ஒரு அரசியல் முழக்கமாக தாம் மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலம் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் நலத்திட்ட மானியங்கள் முடிவுக்கு வரும்போது மகிழ்ச்சியடைவேன்.

சட்டப்பூர்வ பிச்சை

ஆனால் அவற்றை வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டிய அவசியமில்லை. நலத்திட்டங்கள் மூலம் திருப்திப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

அரசாங்க மானியங்கள் முடிவுக்கு வரவேண்டும்! நிலைப்பாட்டை அறிவித்த ஹந்துன்நெத்தி | Government Grants Sri Lankans

ஒரு சமூகமாக, நாம் திருப்திப்படுத்தலைப் பெறுகிறோம் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

அத்தோடு, திருப்திப்படுத்தலை நாடுவது சட்டப்பூர்வமாக பிச்சை எடுப்பது போன்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.