விடுதலைப் புலிகளை இலக்கு வைத்துள்ள டி-சிண்டிகேட்! நிலைப்பாட்டை அறிவித்த சிறிலங்கா அரசு

9 hours ago

இந்திய உளவுத்துறை அமைப்புகள் இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்போது, இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட செய்தி குறித்த தென்னிலங்கை ஊடகமொன்று எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


சட்டவிரோத நடவடிக்கை

இந்த நிலையில், குறிப்பிட்ட தகவல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை இலக்கு வைத்துள்ள டி-சிண்டிகேட்! நிலைப்பாட்டை அறிவித்த சிறிலங்கா அரசு | D Syndicate Ltte Alliance Sri Lanka S Response

“இந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட நாங்கள் ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எனவே, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

காவல்துறைக்கு இந்தத் தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயல்படுவார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை

டி-சிண்டிகேட் என்றும் அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட், தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளை இலக்கு வைத்துள்ள டி-சிண்டிகேட்! நிலைப்பாட்டை அறிவித்த சிறிலங்கா அரசு | D Syndicate Ltte Alliance Sri Lanka S Response

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் டி-சிண்டிகேட் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் பழைய கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!