முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5900 மில்லியன் ரூபாய் கடன் வழங்க ஒதுக்கிடப்படும்
தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.











