துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!

1 day ago

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related