8 ஆண்டுகளின் பின் மரண தண்டனை இரத்து : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

9 hours ago

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, 2017 மார்ச் 20 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்தது.

அத்துடன் பிரதிவாதி தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம்

முன்னைய வழக்கின் போது, மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாட்சியமளிக்க அனுமதிக்காததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமான விசாரணைக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

 நீதிமன்றின் அதிரடி உத்தரவு | After 8 Years Death Penalty Abolished

மேலும் இது நியாயமான விசாரணைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறுவதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!