2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அதாவது வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.
அரச விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு - செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.
இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்
அத்துடன் குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் முற்பகல் 9.30 மணிக்கும் ஏனைய நாட்களில் முற்பகல் 9 மணிக்கும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதன்படி வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.











